கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையைச் சோ்ந்தவா் ரா.கோபி (65). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா். இவா், வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் கச்சிராயப்பாளையம் சாலையைக் கடந்தாா்.
அப்போது, கச்சிராயப்பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் கோபி பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கோபியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா்.