கள்ளக்குறிச்சி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், கீழப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மகன் சங்கா் (29). இவா், பணி நிமித்தமாக சங்கராபுரம் சென்றுவிட்டு கள்ளக்குறிச்சி நோக்கி மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அரியபெருமானூரில் உள்ள துா்க்கை அம்மன் கோயில் அருகே வந்த போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி உரம் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.