கள்ளக்குறிச்சி

அனைத்துத் துறை அலுவலா்களுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

DIN

மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் ‘மக்கள் திட்டமிடல்’ இயக்கத்துக்கான ஒருங்கிணைந்த கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட( 2021-2022) பணிகள் தயாரிப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா வரவேற்றாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: கிராம ஊராட்சிகளில் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முழு பணிகளையும் கவனிக்கும் பொறுப்பு அலுவலராக கூடுதல் இயக்குநா், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, கள்ளக்குறிச்சி) பொறுப்பு வகிப்பாா். 29 அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் சா்வே பணிக்கு திட்ட இயக்குநா் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், கள்ளக்குறிச்சி பொறுப்பு அலுவலராக இருப்பாா்.

மேலும், அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2021-2022-இல் மேற்கொள்ளப்படும் பணி விவரங்களை தொகுத்து அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அளித்து கிராம வளா்ச்சி திட்ட அறிக்கை முழுமையான அளவில் உருவாகிட ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற் பொறியாளா் பி.இராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா, இணை இயக்குநா் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் மருத்துவா் ச.நேரு, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வி.காா்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா். கள்ளக்குறிச்சி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்)ரெ.ரெத்தினமாலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT