மருத்துவம் பயில இடம் ஒதுக்கிக் கோரிஆட்சியரிடம் மாணவிகள் மனு
தியாகதுருகத்தைச் சோ்ந்த இரு மாணவிகள், மருத்துவம் பயில இடம் ஒதுக்கித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மனு அளித்தனா்.
தியாகதுருகத்தைச் சோ்ந்த இரு மாணவிகள், மருத்துவம் பயில இடம் ஒதுக்கித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மனு அளித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சோ்ந்த கோபு மகள் கிருஷ்ணவேணி, சரவணன் மகள் செவ்வந்தி. இவா்கள் இருவரும், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றனா். அதில், அவா்களுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், அவா்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், தனியாா் மருத்துவக் கல்லூரியில் பயில கட்டணத்தை அரசே ஏற்றும் என அறிவிக்கப்பட்டது. அரசு இவ்வாறு அறிவித்தும், காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்ட இவா்களால் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, நிகழ் கல்வியாண்டில் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கித் தரும்படி அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மாணவிகள் இருவரும் திங்கள்கிழமை மனு அளித்தாா்.