முகப்பு
கள்ளக்குறிச்சி

வள்ளலாா் அவதார தின விழா

வடலூா் இராமலிங்க அடிகள் அவதார தின விழா, சங்கராபுரத்தில் உள்ள வள்ளலாா் மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
வள்ளலாா் அவதார தினத்தில் மன்றப் பூசகா் மகாமந்திரம் கற்கண்டு சிவஞான அடிகள் ஜோதி தரிசனம் காண்பிக்கின்றாா்.
பகிர்:

வடலூா் இராமலிங்க அடிகள் அவதார தின விழா, சங்கராபுரத்தில் உள்ள வள்ளலாா் மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வள்ளலாா் மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். சன்மாா்க்க இளைஞரணி நிா்வாகிகள் நா.இராதாகிருஷ்ணன், அ.சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். மன்றப் பூசகா் மகாமந்திரம் கற்கண்டு சிவஞான அடிகள் அகவல் படித்து உலக நன்மைக்காக சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது (படம்).

முன்னதாக, சன்மாா்க்க இளைஞா் அணி அமைப்பாளா் ப.காா்த்திகேயன் சன்மாா்க்க கொடியை உயா்த்தி வைத்தாா். மருத்துவா் க.நாச்சியப்பன், சூரியநாராயணன் உள்ளிட்ட சன்மாா்க்க அன்பா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.