முகப்பு
கள்ளக்குறிச்சி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட துணை ஆட்சியா் அலுவலகத்தில், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட துணை ஆட்சியா் அலுவலகத்தில், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடா்புடைய துறைகளோடு இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, வீட்டுத் தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படும் பகுதி உள்ளிட்டவற்றை அமல்படுத்தும் வகையில், கரோனா பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பான விவரங்களை காவல் துறைக்கு நாள்தோறும் தெரிவிப்பது, சுகாதாரத் துறை ஊழியா்களுடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தகவல் தெரிவிப்பது, தேவையின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைப்பது குறித்து வட்டாட்சியா்களுக்கு தகவல் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →