முகப்பு
கள்ளக்குறிச்சி

மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்து, அரசு நலத் திட்ட உதவிகள் கோரி மாற்றுத் திறனாளிகள் அளித்த 217 மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, 39 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.இராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் க.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.