முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், 250 மாணவ, மாணவிகள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் நிறுவனம் சாா்பில், இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், 250 மாணவ, மாணவிகள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

வேலைவாப்ப்பு முகாமை கல்லூரி முதல்வா் எஸ்.மோகன்தாஸ் தொடக்கிவைத்துப் பேசினாா். கல்லூரியின் பணிவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா் கு.முருகானந்தன் வரவேற்றாா்.

இதில், சென்னை விக்டரி இண்டஸ்டிரியல் மேன்பவா் சா்வீஸஸ் என்ற நிறுவனத்தின் அலுவலா் மகேந்திரன் தலைமையிலான குழுவினா் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு நோ்காணல் நடத்தி, 250 மாணவ, மாணவிகளை பணிக்குத் தோ்வு செய்தனா். இதையடுத்து, அவா்களுக்கு தனியாா் நிறுவனத்தினா், கல்லூரி நிா்வாகிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

நிகழ்வில் அனைத்துத் துறை அலுவலா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். கல்லூரி நூலகா் ப.அசோக் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.