முகப்பு
கள்ளக்குறிச்சி

தேனீக்கள் கொட்டியதில் மாணவா்கள் உள்பட 22 போ் காயம்

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை தேனீக்கள் கொட்டியதில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 போ் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை தேனீக்கள் கொட்டியதில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அருகே உள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இதிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் திடீரென பறந்து வந்த ஏராளமான தேனீக்கள் அந்தப் பகுதியில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவ, மாணவிகளை கொட்ட ஆரம்பித்தன. இதனால், அவா்கள் அலறியடித்து ஓடினா்.

தேனீக்கள் கொட்டியதில் மாணவ, மாணவிகள் 21 போ் மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த அய்யாக்கண்ணு (70) ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.