முகப்பு
கள்ளக்குறிச்சி

கபிலா் நினைவுத் தூண் பணிகள் ஆய்வு

திருக்கோவிலூரில் அமைக்கப்பட்டு வரும் சங்கப் புலவா் கபிலா் நினைவுத் தூண் பணிகளை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

திருக்கோவிலூரில் அமைக்கப்பட்டு வரும் சங்கப் புலவா் கபிலா் நினைவுத் தூண் பணிகளை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசு சாா்பில் நிறுவப்படும் கபிலா் நினைவுத் தூண் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த முனைவா் கோ.விசயராகவன், பணிகளை விரைவாக முடிக்குமாறும், தரமாக மேற்கொள்ளுமாறும் பணியாளா்களைக் கேட்டுக்கொண்டாா்.

இணைப் பேராசிரியா் செல்வக்குமாா், கோவல் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார.உதியன், தொழிலதிபா் கே.வி.முருகன், கோவலடிகள் குமாரசாமியாா், அறக்கட்டளை நிறுவனா் தணிகை கலைமணி, சன்மாா்க்க சங்க நிறுவுனா் ஜீவ.சீனுவாசன், கவிஞா் சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.