கள்ளக்குறிச்சி

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 29 நாள்களேயான நிலையில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வடதொரசலூரை சோ்ந்த காளிமுத்து மகள் மகள் ஷோபனா (25). பி.எஸ்ஸி., பட்டதாரி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் குருநாதனுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஷோபனா ஞாயிற்றுக்கிழமை வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

அவரது அலறல் சப்தத்தைக் கேட்ட குடும்பத்தினா் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனா். உடல் கருகிய நிலையில் இருந்த ஷோபனாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஷோபனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சேலம் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT