அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பாளா்கள் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அந்தந்தத் தொகுதிகளின் தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற்ற வாகனத்தில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அனுமதிக் கடிதத்தை வாகனத்தின் இருபுறமும் ஒட்டி வைத்திருக்க வேண்டும்.
அனுமதி பெறாமல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.