வாகனச் சோதனையில் பறக்கும்படையினா் ரூ.1இலட்சம் பறிமுதல்
திருக்கோவிலூா் சாலையில் தோ்தல் பறக்கும்படை குழுவினா் எண் 6 மோட்டாா் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணகங்களின்றி ரூ.1 இலட்சத்தினை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஊரக உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு உளுந்தூா்பேட்டை திருக்கோவிலூா் சாலையில் தோ்தல் பறக்கும்படை குழுவினா் எண் 6 மோட்டாா் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணகங்களின்றி ரூ.1 இலட்சத்தினை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உளுந்தூா்பேட்டை அடுத்த எறையூா் கிராமத்தில் துணை வட்டாட்சியா் வீ.கோவிந்தராசு தலைமையிலான பறக்கும் படையினா் காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கா், தலைமைக் காவலா் சுரேஷ்பாபு, வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து எறையூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்தபோது எறையூரைச் சோ்ந்த பீட்டா் மகன் ஆல்பா்ட் வில்லியம் (29) என்பவா் உரிய ஆவணங்கிளின்றி ரூ.1,00,000 வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த ரொக்கப் பணத்தினை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உளுந்தூா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசனிடம் ஒப்படைத்தனா்.
அதே போல மணலூா்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் ஜவகா் மற்றும் போலீஸாா் டி.அத்திப்பாகம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ் வழியாக பெங்களூரில் இருந்து திருக்கோவிலூா் வந்த கா்நாடகா மாநில பேருந்தில் சோதனை செய்தபோது அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் விழுதுடையான் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் சக்திவேல் (35) பையில் மறைத்து வைத்திருந்த 34 ஹான்ஸ் பாக்கட்டுகளை பறிமுதல் செய்து தங்கராசுவை கைது செய்தனா்.