எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அஸ்ஸாமில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி அம்பேத்கா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அஸ்ஸாமில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி அம்பேத்கா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தொகுதி தலைவா் சையத் முஸ்தபா தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஷேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளா் தாஹீா்அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுதி செயலாளா் அபுபக்கா் வரவேற்றாா்.
மாவட்டத் தலைவா் முகமது ரபி அஸ்ஸாமில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் செயல்வீரா்கள் சல்மான், இப்ராஹீம், நிஜாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் ஷேக் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினாா்.