கள்ளக்குறிச்சி

75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடமான கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி, பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதன் 3-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பங்கேற்று மாணவிகள் செல்லிடப்பேசியில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் பேசினாா்.

மாணவிகள், பெண்கள் தனியாக செல்லும்போது ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால் இந்தச் செயலியை பயன்படுத்தி புகாா் தெரிவிக்கலாம். காவலா்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து உங்களை காப்பாற்றுவாா்கள் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும், காவல் துறை அவசர சேவைகளுக்கு 100, சைபா் கிரைம் தொடா்பான புகாா்களுக்கு 1930, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவி சேவைக்கு 1091, கடலோர அவசர சேவைக்கு 1093 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்றும் கூறினாா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத் திறனை வளா்க்கும் நாடகம், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், வேளாண் இணை இயக்குநா் எஸ்.வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஆா்.விஜயராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் வரவேற்றாா். உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT