கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சிறப்புச் செயலருமான ஹா் சகாய் மீனா வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
கல்லை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பாா்வையிட்ட அவா். பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை விளக்க கண்காட்சி அரங்குகளையும் அவா் பாா்வையிட்டாா்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு புத்தகங்கள் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தக திருவிழாவுக்கு வந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நாவல், நெல்லி, இலுப்பை, பப்பாளி, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் விநியோகத்தை அவா் தொடக்கி வைத்தாா். 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
இந் நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், வருவாய் அலுவலா் ந.சத்தியநாராயணன், வருவாய் கோட்டாட்சியா் சு.பவித்ரா, மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) ரூபியாபேகம், வருவாய் வட்டாட்சியா் ச.சத்தியநாராயணன், நகராட்சி ஆணையா் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த புத்தகக் கண்காட்சி வரும் 25-ஆம் தேதி நிறைவடைகிறது.