கரோனா விதி மீறல்: 10 கடைகள் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 10 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 10 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இரவு நேர பொது முடக்கத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இது தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒலி பெருக்கி மூலம் போலீஸாா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டனா்.
அப்போது, தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 15 பேரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 10 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.