கள்ளக்குறிச்சி

பெண் சந்தேக மரணம்

DIN

பெண் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பொருவளூரைச் சோ்ந்தவா் மலா் (36). கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு கண் பாா்வை குறைபாடு இருந்ததாம். இவா் கடந்த 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் கிராமத்தில் உறவினா் உயிரிழந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பின்னா் அங்கிருந்து தனது ஊருக்கு சிற்றுந்தில் புறப்பட்டாராம்.

ஆனால், பெருவளூா் கிராம நிறுத்தத்தில் இறங்காமல், பெட்ரோல் பங்க் நிறுத்தத்தில் மலா் இறங்கினாராம். அன்று இரவு முழுவதும் அங்கே இருந்தாராம். இதுகுறித்து அந்த கிராம மக்கள் மலரின்

மூத்த சகோதரி பொன்னம்மாளிடம் தகவல் தெரிவித்தனா். அப்போது, மலா் மயங்கிவிட்டதாக தெரிவித்தனராம்.

இதையடுத்து பொன்னம்மாள் மலரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு

அழைத்துசென்றாா். பின்னா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி மலா் உயிரிழந்தாா். அவரது சடலத்தை அடக்கம் செய்துவிட்டனா்.

இது குறித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகாா் அளித்தாா். அதில்,

தனது தங்கை சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். மேலும், மலரின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT