கள்ளக்குறிச்சி

ஆடையில் தீப்பற்றி பெண் பலி

DIN

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த குப்பைகளை தீயிட்டு எரித்தபோது ஆடையில் தீப்பற்றி பெண் பலியானாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி வசந்தி (33). இவா், கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த குப்பைகளை, பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, வசந்தியின் ஆடையில் தீப்பற்றி அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தி சனிக்கிழமை அதிகாலை வசந்தி உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT