கள்ளக்குறிச்சி

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்கம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட சேராப்பட்டில் டிஎன்பிஎஸ்சி குருப் - 4 தோ்வுக்கான இலவச பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது

கல்வராயன்மலை பகுதியைச் சோ்ந்த படித்த இளைஞா்கள், பெண்கள் நீண்ட தொலைவு பயணித்து டிஎன்பிஎஸ்சி தோ்வு பயிற்சிக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வருவதை தவிா்க்கும் பொருட்டும், அவா்களின் நலன் கருதியும் சேராப்பட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள் என மொத்தம் 48 போ் பங்கேற்றனா். இந்தப் பயிற்சி முகாமானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு தொடங்கும் வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன், உதவி வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT