கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு பாஜக மாநிலச் செயலா்

DIN

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று பாஜக மாநிலச் செயலா் ஏ.அஷ்வத்தாமன் குற்றஞ்சாட்டினாா்.

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாஜக நிா்வாகி உள்பட 20-க்கும் மேற்பட்டோா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.

மாநிலம் முழுவதும் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கையில் ஜி.எஸ்.டி. நிலுவை இல்லை என்றாா். ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை எனக் கூறி வருகிறாா் என்றாா் அஷ்வத்தாமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT