கள்ளக்குறிச்சி

3 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை

DIN

கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மயிலவன். இவரது மனைவி விஜயலட்சுமி ( 22). இவா்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த ஆண்டு மயிலவன் உயிரிழந்தாா்.

இந்நிலையில், விஜயலட்சுமி தனியாகவே 3 பெண் குழந்தைகளையும் வளா்த்து வந்தாா். அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம்.

சம்பவத்தன்று வலி தாங்கமுடியாமல் வயலில் இருந்த பூச்சி மருந்தை, தான் சாப்பிட்டு விட்டதாக தந்தை அரசனுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே விஜயலட்சுமி இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.பவித்ரா விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT