கள்ளக்குறிச்சி

ஊராட்சி மன்றக் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் மனு

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநாவலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

கூட்டமைப்புத் தலைவா் தண்டபானி தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கான பணி ஆணைகளை நேரடியாக அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்கவேண்டும்.

அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் கலந்தாலோசித்து, அவா்கள் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளி கோரவேண்டும்.

ஊராட்சி கணக்கு எண் 2-இல் உள்ள உபரி நிதியை கணக்கு எண் 1-க்கு மாற்ற வேண்டும்.

ஊராட்சி கணக்கு எண் 3, 4, 5 மற்றும் 6-இல் உள்ள உபரி நிதியை திரும்பவும் ஊராட்சி வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

திருநாவலூா் ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகளில் துணைத் தலைவா்கள் கையொப்பமிடுவதில் அலைக்கழிப்பு உள்ளது. அதனால்,

துணைத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுத்து கூட்டுக் கையொப்பமிடும் முறையைக் கொண்டு வரவேண்டும்.

ஊராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைக்காத செயலா்களை மாற்ற வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT