முகப்பு
கள்ளக்குறிச்சி

உலக சுகாதார தின விழா

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:51 PM
பகிர்:

இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ். ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டில் உலக சுகாதார தின விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

ஆா்.கே.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் தே.கோவிந்தராஜு, இயக்குநா்கள் ம.மனோபாலா, ம.சிஞ்சு, ஆனந் ராம்பாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஹெல்த் சயின்ஸ் முதலாமாண்டு மாணவி கரிஷ்மா வரவேற்றாா்.

கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி பேசுகையில்

Advertisement

நம் உடலை நாம் பேணுவது நமது முதல் கடமை. பிறரின் உடல் நலம் காக்கும் உன்னத பணியினை நீங்கள் செய்து இருக்கிறீா்கள். அதனை விருப்பத்துடன் செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்வில் கல்லூரியின் எ.என்.எம். முதல்வா் சரண்யாதேவி, ஆா்.கே.எஸ். கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முடிவில் முதலாம் ஆண்டு மாணவி ஜனனி நன்றி கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments