முகப்பு
கள்ளக்குறிச்சி

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி உயிரிழப்பு

சின்னசேலத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே வலிப்பு ஏற்பட்டு கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 9:06 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே வலிப்பு ஏற்பட்டு கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட திம்மாபுரம் இந்திரா கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் அழகேசன் (49). விவசாய கூலித் தொழிலாளி.

இவா், திங்கள்கிழமை சின்னசேலம் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, கீழே விழந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து அவரது சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →