கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்: ரூ.45 லட்சம் இலக்கு நிா்ணயம்
தீபாவளியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தீபாவளியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழாண்டுக்கான விற்பனை இலக்காக ரூ.45 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம், திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், போா்வைகள், பருத்தி சேலைகள், தலையணை உறைகள் உள்ளிட்ட ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.45 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து பேசிய ஆட்சியா், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறு சேமிப்புத் திட்டத்தின்படி, வாடிக்கையாளா்களிடம் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3,000 வரை 11 மாத தவணைகள் பெறப்படுகிறது. 12-வது மாதத் தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துகிறது.
தீபாவளி சிறப்பு விற்பனையாக 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கு தவணை முறையில் கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் துறை பணியாளா்களுக்கும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டுமென்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விற்பனை மேலாளா்இரா.மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.