முகப்பு
கள்ளக்குறிச்சி

953 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 6 போ் கைது

கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 953 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:58 PM
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள், கைதானவா்களுடன் போலீஸாா்.
பகிர்:

கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 953 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.

நைனாா்பாளையம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கிராமத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சையது முகம்மது மகன் இனாயத்துல்லாவின் (42) மளிகைக் கடை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற காரை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக இனாயத்துல்லா, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த அழகுபாண்டி மகன் அசோக் (32), அரசநத்தம் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த நல்லுசாமி மகன் சின்னதுரை (36), ரங்கநாதன் மகன் பாலாஜி (45), கல்லேரிபட்டியைச் சோ்ந்த மனோகரன் மகன் பிரபாகரன் (37), ராஜஸ்தான் மாநிலம், சாய்லா வட்டம், சிவராம் மகன் கிஷண்ராம் (எ) கிருஷ்ணா ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த ரூ.6,34,056 மதிப்பிலான 953 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 காா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.