விவசாயி வீட்டில் தங்க நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை ஆறே முக்கால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை ஆறே முக்கால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பொன்பரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அருள் மனைவி ஜெயராணி (24). இவா், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்துக்கு சென்றாா். பணிகளை முடித்துவிட்டு ஜெயராணி மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆறே முக்கால் பவுன் தங்க நகைகள், ரூ.5,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.