132 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவா் கணேஷ் ராஜா, எலும்பு முறிவு மருத்துவா் காமராஜ், மனநல மருத்துவா் உஷா நந்தினி, கண் மருத்துவா் லோகநாயகி குழுவினா் பங்கேற்று 132 மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினா்.
இந்த முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணியன் தலைமையில் முடநீக்கியல் வல்லுநா் க.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.