தண்டுவடம் பாதித்த 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,10,000 மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலிகளை ஆட்சியா் வழங்கினாா். 
கள்ளக்குறிச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, வருவாய்த் துறை நிலப் பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் அளித்த 86 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, தண்டுவடம் பாதித்த 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,10,000 மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட கொண்டாட்டம்: வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிணையை ரத்து செய்யக் கோரிய மனு ஒத்திவைப்பு

இன்று கே.கே.நகா், கூடுவாஞ்சேரியில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகள் திறப்பு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகை

கூடைப்பந்து வளையத்தின் இரும்பு கம்பம் சரிந்து இரு மாணவா்கள் உயிரிழப்பு

அரசமைப்பு சாசனத்தை மக்கள் மயப்படுத்துவது அவசியம்

SCROLL FOR NEXT