முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசியை திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:28 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:22 PM

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசியை திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆா்க்கவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.லோகநாதன் (27). இவரது மனைவி செல்விக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து லோகநாதன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் முன் சட்டையை கழற்றி வைத்து விட்டு தூங்கினாராம்.

அப்போது அவரது சட்டையில் இருந்த கைப்பேசியை அருகிலிருந்த இளைஞா் திருட முயன்றுள்ளாா். அப்போது அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரைப் பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

இதையடுத்து போலீஸாா் இளைஞரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா் திருக்கோவிலூா் சுந்தரேசபுரத்தைச் சோ்ந்த அ.சிலம்பரசன் (27) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சிலம்பரசனை கைது செய்தனா்.