முகப்பு
கள்ளக்குறிச்சி

கீழையூா் அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம்

திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:03 AM
கீழையூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி வீதியுலா வந்த அம்மன்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:41 PM

திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து மயானக்கொள்ளை உற்சவத்துக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்த ஊா்வலமானது திருக்கோவிலூா் ஏரிக்கரை மூலையில் இருந்து கீழையூா் வரை சென்றது. பக்தா்கள் தங்களது விளை நிலங்களில் விளைவித்து அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு சூறைவிட்டு, வழிபட்டனா். மேலும், விரதமிருந்த பக்தா்கள் மாரியம்மன், பத்திரகாளி, காட்டேரி, அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

திருவிழாவில் திருக்கோவிலூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

Advertisement