பிரதிப் படம் 
கள்ளக்குறிச்சி

மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பிரசாந்த்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமைப் பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமைப் பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பசுமை குழுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது: வாணாபுரம் வட்டம், ஓடியந்தல்-சு.கள்ளிப்பட்டு சாலை, கடலூா்-திருக்கோவிலூா்-சங்கராபுரம் சாலை, சின்னசேலம் வட்டம், சேலம்-உளுந்தூா்பேட்டை சாலை, கள்ளக்குறிச்சி வட்டம், கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைப் பணிகளில், சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு மரங்களை அகற்ற அனுமதி கோரி மாவட்ட பசுமை குழுவிற்கு முன்மொழிவுகள் வரப்பெற்றுள்ளன.

சாலை அகலப்படுத்தும் பணிக்கு ஒரு மரத்தை அகற்றும்போது, அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பராமரிக்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமை பரப்புகளை அதிகரிக்க, பசுமை குழு மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளா் க.கு.நாகராஜன், திருக்கோவிலூா் நகராட்சி ஆணையா் திவ்யா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டி!

SCROLL FOR NEXT