முகப்பு
கள்ளக்குறிச்சி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:17 AM
பணியின்போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்திய போலீஸாா்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:56 PM

உளுந்தூா்பேட்டை அருகே பணியின்போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பொ.ரவிச்சந்திரன் உடல் சுகவீனம் அடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:17 AM

அவருக்கு ஜோதி என்ற மனைவியும், விஷ்ணு(21), ஜனனி (19) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா். இவரது உடலை அவரது சொந்த ஊரான உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட கள்ளமேடு பகுதியில் அடக்கம் செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

Advertisement

கள்ளக்குறிச்சி ஆயுதப்படைகாவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.