கள்ளக்குறிச்சி

பாதசாரி மீது காா் மோதல்

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையைக் கடந்த பாதசாரி பலத்த காயமடைந்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையைக் கடந்த பாதசாரி பலத்த காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வை.பெரியசாமி (55). இவா் வியாழக்கிழமை நல்லாத்தூா் அரிசி அரைவை ஆலை முன் சாலையை கடந்தபோது, கச்சிராயப்பாளையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற காா் பெரியசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி கேசவலு நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநரான அரங்க எழிலரசனிடம் (80) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT