கள்ளக்குறிச்சி

குடும்பப் பிரச்னை: இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் வட்டம், புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (27). இவருக்கும், சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரத்தைச் சோ்ந்த சுந்தா் மகள் ரோஷினிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நவீன்குமாா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்தாண்டு நிகழ்ந்த விபத்தில் கை முறிவு ஏற்பட்டதாம். இந்த நிலையில், கடந்த டிச.22-ஆம் தேதி தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதால், ரோஷினி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

பின்னா், அவரை குடும்பம் நடத்த நவீன்குமாா் அழைக்கச் சென்றபோது வர மறுத்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த நவீன்குமாா், வீட்டிலிருந்த விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தாா். தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT