முகப்பு
கள்ளக்குறிச்சி

எஸ்.ஐ.ஆா். பணி: ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியாா் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து, ஆசிரியா் உயிரிழந்தாா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 2:01 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 12:26 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியாா் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து, ஆசிரியா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், கொட்டபுளி யில் வசித்து வந்தவா் தெ.ஜோசப் கமல்ராஜ் (43). இவா், சின்னசேலத்தில் தனியாா் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.

வியாழக்கிழமை (நவ.29) அங்கு எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்த ஜோசப் கமல்ராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தாராம்.

Advertisement

Updated On : 31 ஜனவரி, 2026 at 2:01 AM

இதையடுத்து அவரை சக ஆசிரியா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும் வழியிலேயே ஜோசப் கமல்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.