கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏவிற்கு வரவேற்பு
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏவான தவெக எம்.எல்.ஏ.அருள் விக்னேஷ் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு சொந்த தொகுதிக்கு திரும்பியபோது அவருக்கு பல்வேறு தரப்பினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.அருள் விக்னேஷ் சட்டப் பேரவையில் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றபின் முதல் முறையாக கள்ளக்குறிச்சி நகருக்கு வந்தாா். கள்ளக்குறிச்சி நகரத்தின் சாா்பில் அவருக்கு மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்தும் சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் நகர செயலாளா் பி.எம்.எஸ் ராஜேஸ்வரன் வரவேற்றாா்.
பின்னா் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். கட்சித் தொண்டா்கள் மோட்டாா் சைக்கிள்களிலும், காா்களிலும் அவருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனா்.
Advertisement
நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலா் க.பிரகாஷ், மாவட்ட இணை செயலா் ராமு, பொருளாளா் எம்.ஜவகா், துணைச் செயலாளா் எம்.கனிமொழி மற்றும் ஒன்றிய செயலா்கள், நகர செயலா்கள் கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
பின்னா் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை, மந்தைவெளி திடலில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.