முகப்பு
புதுச்சேரி

கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வு

புதுச்சேரியை அடுத்த காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

புதுச்சேரியை அடுத்த காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் எம்.வெங்கிடகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் எம்.அஞ்சான் வரவேற்றார்.

விழுப்புரம் சிகா கணினி மற்றும் மேலாண்மைக் கல்லூரி சமூக நலப்பணித்துறை உதவி பேராசிரியர் ஜி.பிரபு, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்து பேசினார். பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஜி.முத்துக்குமார் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →