புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சாவு: தற்கொலைக்குத் தூண்டியதாக காவல் துறை ஊழியர், மனைவி மீது வழக்கு

தினமணி

என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறை தலைமையக ஊழியர், அவரது மனைவி மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 புதுச்சேரி தர்மாபரியைச் சேர்ந்த தயாளன் கடந்த 9-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 இதுதொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கந்து வட்டி கொடுமையால் தனது மகன் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இந்த நிலையில், தயாளன் தற்கொலை முடிவுக்குச் செல்வதற்கு முன்பாக, அவரை ரெட்டியார்பாளையம் காவேரி நகரைச் சேர்ந்த இளங்கோவன் தனது மனைவியுடன் சென்று கடன் விவகாரம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவர் குடும்பத்துடன் தலைமறைவானதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, தம்பதியை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT