உழவர்கரை நகராட்சியில் வர்த்தக உரிமம் பெறாத நிறுவனங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் எம்.எஸ்.ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வர்த்தக உரிமம் பெறாமல் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மேரி உழவர்கரை ரங்கா நகரில் இயங்கி வந்த பாரத் இண்டஸ்ட்ரியல் ஹார்டுவேர்ஸ், ஓம் சக்தி கம்ப்யூட்டர்ஸ், அஸ்வினி மெடிக்கல்ஸ் நிறுவனங்கள் மீது நகராட்சி ஆணையர் தலைமையில் ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்
மேற்கண்ட மூன்று நிறுவனங்களிலும் அசையும் சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டன. இவ்வாறு நகராட்சி உரிமம் பெறாமல் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.