காமராஜர் நகர் தொகுதிக்கு உள்பட்ட ரெயின்போ நகரில் மரக்கன்றுகள் நடும் பணியை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
காமராஜர் நகரின் ரெயின்போ நகர் பகுதி முழுவதும் பசுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெயின்போ நகரின் அனைத்து வீதிகளிலும் மரங்களை வளர்க்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தப் பணியை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் தொடக்கி வைத்தார். ரெயின்போ நகர் நலவாழ்வுச் சங்கம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.