புதுச்சேரி

மாணவர் மீது தாக்குதல்: 3 பேருக்கு வலை

தினமணி

புதுவையில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 புதுப்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலாஜி (26). இவர், புதுவை பல்கலை.யில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் பரத்துக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
 இந்த நிலையில், பாலாஜி சனிக்கிழமை நடந்து வந்தபோது பரத்தை பார்த்து முறைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது பரத்துக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் யுவராஜ், ராஜபாண்டியன் ஆகியோர் பாலாஜியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாலாஜி காயமடைந்தாராம். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பரத் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT