புதுவை மாநில கராத்தே சங்கக் கூட்டம்
புதுவை மாநில கராத்தே சங்க செயற்குழுக் கூட்டம் மூலக்குளம் ஜி டோக்கு காய் கராத்தே பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநில கராத்தே சங்க செயற்குழுக் கூட்டம் மூலக்குளம் ஜி டோக்கு காய் கராத்தே பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநில சங்க பொதுச் செயலாளர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். புதிய உறுப்பினராக இணைந்த மூத்த பயிற்சியாளர் ஜோதிமணிக்கு மாநில சங்க அங்கீகார சான்று வழங்கப்பட்டது. மேலும், கொல்கத்தாவில் தேசிய கராத்தே போட்டி ஜனவரி மாதம் நடைபெற உள்ளதால் அப்போட்டியில் பங்கேற்க உள்ள புதுவை மாநில வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வது சிறப்பு பயிற்சி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி வரும் 11-ஆம் தேதி புதுவை மாநில தேர்வு போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்க நிர்வாகிகள் வேலாயுதம், விஸ்வசுந்தரம், அழகப்பன், முத்துரத்தின சற்குணம், திருநாவுக்கரசு, பழனிவேல், குமரன், பாலமுரளி, உள்பட பலர் பங்கேற்றனர்.