தினக்கூலி ஊழியர்கள்76 பேருக்கு பணி நிரந்தர ஆணை
தினக் கூலி பணியாளர்கள் 76 பேருக்கு நிரந்தர பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணையை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வழங்கினார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
தினக் கூலி பணியாளர்கள் 76 பேருக்கு நிரந்தர பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணையை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வழங்கினார்.
புதுவை சட்டப்பேரவையில் உள்ள குழு அறையில் புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் பணிபுரியும் 76 தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இதில் 55 ஆண் ஊழியர்கள், 21 பெண் ஊழியர்கள் என மொத்தம் 76 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தர ஆணையைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில், பணியாளர் சீர்திருத்தத் துறை செயலர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.