புதுச்சேரியில் மே 19-இல் திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு
புதுவை மாநில திமுக நிர்வாகிகளுடன், அந்தக் கட்சியின் செயல் தலைவர் புதுச்சேரியில் மே 19-ஆம் தேதி கள ஆய்வில் ஈடுபடவுள்ளார்.
புதுவை மாநில திமுக நிர்வாகிகளுடன், அந்தக் கட்சியின் செயல் தலைவர் புதுச்சேரியில் மே 19-ஆம் தேதி கள ஆய்வில் ஈடுபடவுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் நோக்கில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், புதுவையிலும் கட்சியை வளர்க்கும் வகையில் வருகிற 19-ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதில் புதுவை வடக்கு, தெற்கு மாநில நிர்வாகிகள், காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்துத் தொகுதி மற்றும் கிளை செயலாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கட்சியின் புதுவை வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேச ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.