புதுச்சேரி

சுகாதார ஊழியர்கள் தர்னா

DIN

நோயாளி பராமரிப்புப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை கவன ஈர்ப்பு தர்னாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் மு. அன்புசெல்வன், தலைவர் ஜானகி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மு. கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். 
இதில், 7 ஆவது ஊதியக்குழு அறிவித்த 8 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நோயாளி பராமரிப்புப் படி வழங்க வேண்டும், செவிலியர் உதவித்தொகை, பயணப்படி உள்ளிட்ட உயர்த்தப்பட்ட சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT