புதுச்சேரி

பாரதி பூங்கா மூடல்: காதலர்கள் ஏமாற்றம்

DIN

புதுவை முதல்வரின் போராட்டத்தின் காரணமாக பாரதி பூங்கா வியாழக்கிழமை மூடப்பட்டதால், அங்கு காதலர் தினத்தை கொண்டாட வந்த காதலர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கிரண் பேடியை வெளியேற வலியுறுத்தி ஆளுநர் மாளிகைக்கு எதிரே முதல்வர் வே. நாராயணசாமி நடத்தி வரும் போராட்டத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையை சுற்றி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டனர். 
இதனால் பாரதி பூங்காவின் 4 நுழைவாயில்களையும் போலீஸார் பூட்டினர்.
வழக்கமாக, காதலர் தினத்தையொட்டி பாரதி பூங்காவுக்கு அதிகளவிலான காதலர்கள் வருவது வழக்கம். ஆனால், போராட்டத்தின் காரணமாக பாரதி பூங்கா பூட்டப்பட்டதால், காதலர்கள் பூங்காவுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT