புதுச்சேரி

முதல்வரின் போராட்டம் தேர்தலுக்கான நாடகம் அதிமுக குற்றச்சாட்டு

DIN

புதுவை முதல்வரின் போராட்டம் மக்களவைத் தேர்தலுக்கான நாடகம் என்று அதிமுக பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதுவை துணைநிலை ஆளுநரைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள்,  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தலைக்கவச சட்டம் சம்பந்தமாகவும்,  பல்வேறு நிர்வாக ரீதியான செயல்பாடுகள் குறித்தும்,  ஆளுநர் மாளிகை முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு மலிவு விளம்பரத்துக்காக நடத்தப்படுகிறது.

மக்கள் நலன் சார்ந்த பிரச்னைக்காக முதல்வர்,  அனைத்து எம்எல்ஏக்களையும் அழைத்துப் பேசி அரசு சார்பில் இந்த போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். 
புதுவையில் நிலவி வரும் பிரச்னையில் மத்திய உள்துறை தலையிட்டு அரசை முடக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT