புதுச்சேரி

பாப்ஸ்கோ அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் போராட்டம்

DIN

நிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து, பாப்ஸ்கோ அதிகாரிகள் அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுவையில் பாசிக் ஊழியர்கள் 55 மாத நிலுவை ஊதியத்தைக் கேட்டு தொடர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புதுவையில் இயங்கி வரும் மற்றொரு அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் வேளாண் தொடர்புடைய பணியாளர்களுக்கு 24 மாதங்களாகச் ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதை வழங்கக் கோரி, தொடர்புடைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
 ஜூலை 1 -ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், சொன்னபடி சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதனால், பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, பாப்ஸ்கோ இயக்குநர் மற்றும் அலுவலக அதிகாரிகளின் அறைகளை திங்கள்கிழமை பூட்டி வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
 அப்போது, நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாப்ஸ்கோவுக்கு சொந்தமான சில பார்களும், காய்கறி, எரிவாயு கடைகளும் மூடப்பட்டதுடன், விநியோகமும் பாதிக்கப்பட்டது.
 மேலும், வங்கி சேவைகளும் முடங்கின. அதேநேரம், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல இயங்கின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT